Like & share

Wednesday, 8 February 2012

வெளிநாடு போகும் நினைப்போருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்,

மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.
சுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்‌ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.

Saturday, 7 January 2012

மொபைலில் தமிழ் font இன்டர்நெட்


மொபைலில் தமிழ் font இன்டர்நெட்

ஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது.
லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல்
அதிக விலை கொடுத்து நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று
ஆசையோடு வாங்கி. ஆனால் இன்டர்நெட் பயன்படுத்தும்போது
அதாவது இ மெயில், Facebook , போன்றவற்றில் வரும் தமிழ்
எழுத்துக்கள் (fonts) கட்டம் கட்டமாக வருகிறது.
தெரிவதில்லை படிக்க முடிவதில்லையே என ஏக்கமா...?
கவலை வேண்டாம்...

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு



இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.
அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.